அரூர், ஏப்.3: போக்குவரத்து துறை சார்பில் அரூரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகன தணிக்கையில் விதி மீறி வாகன ஓட்டிகளிடம் அபராதமாக ₹2,65,400 அபராதம் விதிக்கப்பட்டது.அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் மற்றும் குழுவினர் அரூர் பைபாஸ் சாலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி கணவாய் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில் 382 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, சரக்கு வாகனத்தில் ஆட்கள் ஏற்றி வந்தது, உரிய அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வந்தது, அதிக ஆட்களை ஏற்றி வந்த ஆம்னி பேருந்துகள், அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள் உள்ளிட்ட 52 வாகனங்களுக்கு ₹2,65,400 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முறையான ஆவணம் இல்லாத 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.