×

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி 12ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை, ஏப். 1: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரும் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேர் திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. இதனால் அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 24ம் தேதி பணி நாளாகும். வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு வரும் 25ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுறை 1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பு கருதியும், அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள் அறிவித்த தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Northamalai Muthumariamman Temple Chariot Festival ,
× RELATED புதுக்கோட்டையில் நார்த்தாமலை...