×

மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை திமுக வேட்பாளர் லட்சுமணன் உறுதி



நெல்லை, ஏப். 1: நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணன், தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலையில் மானூர் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கிராமம், கிராமமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், நெல்லை தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்றுவேன். மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழில் நிறுவனங்களை அமைக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன்.

மானூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளை சரிசெய்து ஆண்டு முழுவதும் தண்ணீர் ேதக்கி வைக்க நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவேன், என்றார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, அன்பழகன், நடராஜன், மாவட்ட துணை செயலாளர் மணி, புலி கண்ணன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் வெயிலப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜூ, விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி பாண்டியன், துணை அமைப்பாளர் அசோக், தென்பத்து கணேசன், மாநகர துணை செயலாளர் ரமேஷ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் எல்ஐசி பேச்சிமுத்து, குருவையா, காசிமுத்துபாண்டி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லை மறைமாவட்ட கத்தோலிக்க பேராயர் அந்தோனிசாமியை நெல்லை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணன் சந்தித்து ஆசி பெற்றார்.

Tags : DMK ,Lakshmanan ,Manor ,
× RELATED இறந்த தாய்க்கு இறுதிச் சடங்கு...