×

கொரோனா விழிப்புணர்வு பேரணி

அரூர், மார்ச் 31:  அரூர் பேரூராட்சி சார்பில் வாரச்சந்தையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடைவீதிகளில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திய படி, பேரணி நடத்தப்பட்டது. திருமண மண்டபம், கடைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. அரூர் பேரூராட்சி சந்தையில் 5கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டது. முககவசம் அணியாத நபர்களுக்கு ₹1000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness Rally ,
× RELATED கொரோனா விழிப்புணர்வு பேரணி