×

பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கடத்தியவர் கைது

தர்மபுரி, மார்ச் 30:  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காளப்பட்டி பகுதியை சேர்ந்த 16வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்ற சிறுமியை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரில் அதேப்பகுதியில் உள்ள கொத்தலம் பகுதியை சேர்ந்த சங்கர்(29). கூலி தொழிலாளி என்பவர் ஆசைவார்த்தை கூறி, எனது மகளை திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றுள்ளார் எனகூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில் அதே ஊரில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Balakod ,
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி