×

இலக்கியம்பட்டி அருகே குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு

 தர்மபுரி, மார்ச் 30:  குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நெல்லி நகர் பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி, நெல்லிநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி, நெல்லிநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் கடந்த ஒரு வாரமாக குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் குடிநீர் மிகுந்த துர்நாற்றத்துடன் உள்ளது. இது தொடர்பாக இலக்கியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட ஊழியர், வார்டு உறுப்பினர் ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, குடிநீரை சுகாதாரமாக வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Likhiyampatti ,
× RELATED இலக்கியம்பட்டி ரேஷன் கடைகளில் திமுக எம்எல்ஏ ஆய்வு