×

வானதிரையன்பட்டினத்தில் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

ஜெயங்கொண்டம், மார்ச் 29: ஜெயங்கொண்டம் அருகே வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜெயங்கொண்டம் அருகே வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் ஆயிரத்துக்கும் குறையாத அளவில் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வாணதிரயன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த முருகன் கோயிலுக்கு அருகில் உள்ள கிராமங்களான இடையார், பிலிச்சிகுழி, ஒக்கநத்தம், பருக்கல், உடையார்பாளையம், சிலகால், பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் முருகனுக்கு 1008 பேர் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் பக்தர்கள் இடம் பயத்துடன் இருப்பதால் இந்த வருடம் சுமார் 700 பேர் மட்டுமே காவடி எடுக்க வந்திருந்தனர். முன்னதாக முருகன் வள்ளி தெய்வானைக்கு திரவியப்பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் பால் தயிர் தேன் உள்ளிட்ட பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் பால் காவடி வேல் காவடி உள்ளிட்ட பலவகையான காவடிகள் எடுத்து சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். காவடி திருவிழாவை காண வானதிராயன்பட்டி நம் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோவில் விழா கமிட்டியினர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags : Panguni Uttara ceremony ,Murugan Temple ,Vanathiraiyanpattinam ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...