×

கடத்தூரில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்

கடத்தூர், மார்ச் 29: கடத்தூர் பேருந்து நிலையம், வணிக வளாகம், மளிகை கடை, காய்கறி கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான பணியாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது கடைகளில் தடையை மீறி பயன்படுத்திய 3 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை காரர்களுக்கு ₹1100 அபராதம் வசூலித்தனர். மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadatur ,
× RELATED டூவீலர்கள் மோதிய விபத்தில் விவசாயி பலி