×

அனுமதியின்றி பிரசாரம் இருவர் மீது வழக்குப்பதிவு

தா.பழூர், மார்ச் 26: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் பகுதியில் அனுமதி இன்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மாவீரன் மஞ்சள் படை ஒன்றிய செயலாளர் ராமராஜன் மற்றும் ஐஜேகே ஒன்றிய தலைவர் அறிவழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தா.பழூர் சுற்றி உள்ள பகுதிகளில் எந்தவித முன் அறிவிப்பு இன்றியும், அனுமதி இன்றியும் கட்சி உருவம் பதித்த கொடி, பதாகைகள் ஏந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அங்கராயநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...