தர்மபுரி, மார்ச் 26: தர்மபுரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, நேற்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கோணங்கிஅள்ளி, முருகநாதபுரம், அதியமான்நகர், தின்னப்பட்டி, பி.அக்ரகாரம் காலனி, பி.அக்ரகாரம், சிக்கனம்பட்டி, சி.புதூர், தாமரைஏறி காலனி, அரிச்சந்திரனூர், ஏறுபள்ளி காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் தடங்கம் சுப்ரமணியை ஆதரித்து, திமுக கொள்கை பரப்பு செயலாளர் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி சி.புதூர், எச்சனஅள்ளி, போல்நாய்கக்கனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘சட்டமன்ற தேர்தலில், தடங்கம் சுப்ரமணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். எனவே, தடங்கம் சுப்ரமணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்,’ என்றார்.இந்நிகழ்ச்சியில், எச்சனஅள்ளி சண்முகம், ரவி, துரைசாமி, வைகுந்தம், கண்ணன், சின்னராஜ், சித்தன், பழனிசாமி, ராஜகோபால், வக்கீல் சிவம், மின்னல் சக்தி, திமுக இளையசங்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.