×

திருநகர் வங்கியில் கொள்ளை முயற்சி

திருப்பரங்குன்றம், மார்ச் 26: திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஓம்சக்தி நகரில் உள்ளது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஊழியர்கள் பணியை முடித்து விட்டு வங்கி கதவை பூட்டி சென்றனர். நேற்று காலை வங்கிக்கு ஊழியர்கள் வந்து பார்த்த போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

அப்போது அப்பகுதியில் உடைக்கப்பட்ட நிலையில் பூட்டு, அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்கள் கிடந்தன. கொள்ளையடிக்க வந்தவர்கள் உள்பக்க கதவை உடைக்க முடியாமல் போனதால் வங்கியில் உள்ள பணம், நகைகள் தப்பித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வங்கியை கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thirunagar Bank ,
× RELATED நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1...