இலுப்பூர், மார்ச் 23: இலுப்பூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இலுப்பூர் பகுதியில் நேற்று பறக்கும் படை அலுவலர் பூங்காவனம் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அன்னவாசல் அருகே உள்ள மாம்பட்டியில் வாகன தணிக்கையின் போது இலுப்பூரை சேர்ந்த பிஸ்கட் சேல்ஸ் மேன் அருண்குமார் என்பவாிடம் இருந்து 53 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர் இதே போல் இலுப்பூர் மேட்டுச்சாலை பகுதியில் கீரனூரை சேர்ந்த வியாபாரி அலாவுதின் என்பவாிடம் இருந்து 2 லட்சத்து 9 ஆயிரத்து 987 பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த ரூ.3 லட்சத்து 13 ஆயிரத்து 67 ஐ பறக்கும் படையினர் விராலிமலை சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணியிடம் ஒப்படைத்தனர். ஆர்டிஓ நேர்முக உதவியாளர் தமிழ்மணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிச்சாமி, ஆகியோர் உடன் இருந்தனர்.