×

உடுமலை அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

உடுமலை, மார்ச் 21: உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை சரவணா மில் அருகே பிரசாரத்தை துவங்கினார். வாசவி நகர், அனுஷம் நகர் உள்ளிட்ட நகர பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேலும் ஏ.நாகூர் முதல் பூசாரிபட்டி வரை வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டார். அதிமுக மற்றும் பாஜ, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர், இலவச வாஷிங் மெஷின் வழங்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற பெண்களுக்கு இலவச கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. சாலை வசதி, குடிநீர் வசதி, அம்மா மினி கிளினிக், கால்நடை மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, இலவச கேபிள் இணைப்பு, இலவச வீடு வழங்கப்படும். எனவே, வாக்காளர்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பிரசாரத்தின்போது ஏ.நாகூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா, திருமலைச்சாமி, ஆவல்பட்டி நடராஜ், கஞ்சம்பட்டி சவுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Udumalai ,AIADMK ,Minister ,Radhakrishnan ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு