×

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளர் மனுத்தாக்கல்

கலசப்பாக்கம், மார்ச் 20: கலசப்பாக்கம் தொகுதியில் மொத்தம் 26 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அதிமுக வேட்பாளருக்கு போட்டியாக அதே கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் பெ.சு.தி.சரவணன், அதிமுக சார்பில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் நேரு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த எம்.திருநாவுக்கரசு சுயேட்சையாக நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டு அவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.திருநாவுக்கரசு சுயேட்சையாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடலாடி கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரி ஜெகநாதன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் டெபாசிட் தொகையை 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், ஒரு ரூபாய் நாணயம் என சில்லறைகளாக மூட்டையில் கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்திபனிடம் வழங்கி வேட்புமனு தாக்கல் செய்தார். தாசில்தார் அமுல் உடனிருந்தார்.

Tags : AIADMK ,Kalasapakkam ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...