×

கலெக்டர் தகவல் பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து விரட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் திமுக வேட்பாளர் பிரபாகரன் வாக்குசேகரிப்பு

பெரம்பலூர், மார்ச் 20: பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்க உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் நகரில் நேற்று பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டினார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று பெரம்பலூர் நகரில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பழைய பஸ்ஸ்டாண்டு பழக்கடை வியாபாரிகள், புது பஸ்டாண்டு சாலையோர வியாபாரிகள், திருநகர் அரசுத் தலைமை மருத்துவமனை ஆட்டோ சங்கம், காமராஜர் வளைவு ஆட்டோ சங்கம், ஆத்தூர் சாலைஆட்டோ சங்கம், புது பஸ்ஸ்டாண்டு ஆட்டோசங்கம் ஆகியவற்றில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள நகராட்சியின் குப்பைமேடு பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடமும், புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் திருநங்கைகளிடமும் திமுக தேர்தல் அறிக்கையினை கொடுத்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆதரவு திரட்டும்போது ஆட்டோ ஓட்டுநர்களிடம், பழக்கடை, மார்க்கெட் வியாபாரி களிடம், துப்புரவுப் பணியாளர்களிடமும், திருநங்கைகளிடமும், பாஜகவை தமிழ் நாட்டிலிருந்து விரட்டவும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ . மாவட்ட செயற்குழு உறுப் பினர் செல்லதுரை, திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை,

சிஐடியூ மாவட்ட தலைவர் அகஸ்டின், பழவியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், பொதுத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் சண்முகம், செயலாளர் மல்லீஸ், கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : DMK ,Prabhakaran ,Udayasuriya ,BJP ,Tamil Nadu ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!