×

வாகனம் மோதி புள்ளிமான் பலி

தர்மபுரி, மார்ச் 18: தர்மபுரி மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதால், வனப்பகுதியில் தண்ணீர், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வினவிலங்குகள் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம் மகளிர் கலைக்கல்லூரி எதிரில், புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையை மான் கடந்த போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி மான் உயிரிழந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த மானை மீட்டு, பெரியாம்பட்டி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து, வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.


Tags : Pointman ,
× RELATED மாமல்லபுரத்தில் மர்மமான முறையில் இறந்த புள்ளிமான்