×

டிடிவி தினகரன் வெற்றி உறுதி கோவில்பட்டி தொகுதி முன்மாதிரியாக திகழும் மாணிக்கராஜா பேட்டி

கோவில்பட்டி, மார்ச் 18: அமமுக வேட்பாளா் டிடிவி தினகரன் வெற்றி உறுதி என்றும், இதன் மூலம் கோவில்பட்டி தொகுதி முன்மாதிரியாக திகழும் என்றும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளராக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா நேற்று கோவில்பட்டி பகுதியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவில்பட்டியில் உள்ள இல்லத்தார் பிள்ளைமார் சமூக சங்கம், சைவ வேளாளர் சங்கம், வணிகர் சங்கம், யோகீஸ்வரர் சங்கம், முடிதிருத்துவோர் சங்கம், பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் உள்ளிட்டோரை சந்தித்து அமமுகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டு கொண்டார். மேலும் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆர்சி, சிஎஸ்ஐ சர்ச்சுகளுக்கு சென்று டிடிவி தினகரன் வெற்றி பெற பிரார்த்தனை செய்தார்.
இதுகுறித்து மாணிக்கராஜா கூறும்போது, ‘டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் கோவில்பட்டியில் 24 மணி நேரமும் மக்களை சந்திக்க அலுவலகம் அமைக்கப்படும். தினகரன் வெற்றி பெறுவதால் கோவில்பட்டி தொகுதி முதல்வர் அந்தஸ்தை பெறுவதோடு மக்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கோவில்பட்டி தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்கும். வியாபாரிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களுக்காக பாடுபடக்கூடியவர் டிடிவி தினகரன். அவருடன் நானும் பணியாற்ற உள்ளேன். மக்களின் குறைகள் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார்.
 வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நகர செயலாளர் கார்த்திக், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதிபாண்டியன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பூலோகபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Manikkaraja ,Kovilpatti ,DTV Dhinakaran ,
× RELATED கோடை வெப்பம்: குடிநீர், நீர்மோர்...