நெல்லை, மார்ச் 18: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று (18ம் தேதி) காலை வேட்புமனு தாக்கல் செய்கிறார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மாநில பொருளாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை 11 மணிக்கு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைவேலுவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காலை 10 மணிக்கு நாங்குநேரி தாலுகா அலுவலகம் வருகின்றனர். பின்னர் நாங்குநேரி ரூபி மனோகரன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.