×

பாலக்கோடு திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

பாலக்கோடு மார்ச் 16;  பாலக்கோடு திமுக வேட்பாளர் முருகனுக்கு பாலக்கோடு பேரூர் 4வது வார்டு பாபு சாகிப் தெருவில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பாலக்கோடு திமுக வேட்பாளராக வக்கீல் முருகன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது, பாலக்கோடு பேரூர் 4 வது வார்டு பாபு சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பாலக்கோடு பேரூர் திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான முரளி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் பட்டு அஜிஸ்சுல்லா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பத்தேகான், தளபதி ஆட்டோ சங்க தலைவர் அன்வர், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஆசிப், ஆப்பிள் பாபு, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் விஜயன், இளைஞரணியைச் சேர்ந்த ரூஹித், அஸ்லம், இம்தாத்துல்லா, மாலிக், ஹாயித், இம்தாத், சபி, அப்ரார், பாயிஸ், யாசின், மாலிக், ராஜா, முஸ்டாக் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Balakod ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்