×

கஞ்சா விற்பனைசெய்த தேசிங்கு ராஜா கைது

திண்டுக்கல், மார்ச் 16:  திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் நேற்று வட்டப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேட்டுப்பட்டியை அடுத்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தேசிங்குராஜா(30) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செல்வம்(56), முருகன்(57), குமார்(42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.560 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Desingu Raja ,
× RELATED கஞ்சா விற்பனைசெய்த தேசிங்கு ராஜா கைது