×

சத்தியவான் வாய்க்காலில் இருந்து மன்னம்பந்தல் நோக்கி செல்லும் கழிவுநீர்

மயிலாடுதுறை, மார்ச் 15: மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீர் அருகே செல்லும் சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டு கிழக்கு நோக்கி செம்பனார்கோவில் ஆக்கூர், சின்னங்குடி வரை செல்கிறது. தற்போது கிழக்கு நோக்கி சென்ற கழிவுநீர் மேற்கு நோக்கியும் மன்னம்பந்தல் பகுதியில் எதிர்த்து செல்ல துவங்கி உள்ளது. மன்னம்பந்தல் பகுதியில் செல்லும் சத்தியவான் வாய்க்காலில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரில் கால்வைத்து நடந்தால் சருமநோய்கள் வருவதாக ஊராட்சி மன்ற தலைவரிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆறுபாதி கிராமத்தில் இருந்து கழிவுநீர், மன்னம்பந்தல் பகுதிக்கு செல்லும் பகுதியை பார்வையிட்டனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் மற்றும் பொதுப்பணி துறையினரை தொடர்பு கொண்டு கேட்டனர். பல நாட்களாகியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சத்தியவான் வாய்க்காலில் மேற்கு நோக்கி செல்லும் கழிவுநீருக்கு தடுப்புகளை ஏற்படுத்தி அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sathiyavan ,Mannambandal ,
× RELATED மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா...