×

ஆசனூர் அருகே லாரி மோதி மின்கம்பம் முறிந்தது

சத்தியமங்கலம், மார்ச் 12: சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள ஆசனூர், கோட்டாடை, மாவள்ளம், கேர்மாளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு ராஜன் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்கம்பங்கள் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை திம்பம் அடுத்துள்ள செம்மண் திட்டு பகுதியில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் உடைந்து சாய்ந்து விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் மின் வினியோகம் தடைபட்டுள்ளது. இது குறித்து ஆசனூர் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Asansol ,
× RELATED தேர்தலில் இருந்து விலகுவதாக பவன் சிங் அறிவிப்பு!