×

தா.பழூர் அருகே டூவீலர் மீது லோடு ஆட்டோ மோதி கூலி தொழிலாளி சாவு

தா.பழூர், மார்ச் 12: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே ஆலவாய் கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(63), கூலித்தொழிலாளி.
இவரும் கீழநத்தம் கிராமத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரும் பெண் பார்க்கும் விஷயமாக சுத்தமல்லி வரை சென்றுவிட்டு. அங்கிருந்து திரும்பி விக்கிரமங்கலம் சாலையில் டூவீலரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது ஆலவாய்க்கும் கோரைக்குழிக்கும் இடையே துணிச்சிக்குட்டை என்ற ஏரிக்கு அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மரியதாஸ் ஓட்டி வந்த டூவீலர் மீது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதியது. அப்போது டூவீலர் பின்னால் அமர்ந்து வந்த கோவிந்தராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். சரக்கு ஆட்டோவின் முன் சக்கரம் கோவிந்தராஜின் தலையின் மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் கோவிந்தராஜ் அதே இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் எஸ்ஐ ரவிச்சந்திரன் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோவை ஓட்டி வந்த காமரசவல்லி கிராமத்தைச் சார்ந்த மாயகிருஷ்ணன்(29) என்பவரை கைது செய்தனர்.

Tags : Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!