×

நாகர்கோவிலில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம்

நாகர்கோவில், மார்ச் 10: நாகர்கோவிலில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதி நவீன மின்னணு வாகனத்தின் வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தினை பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுசீந்திரம் பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் பார்வையிட்டனர்.

Tags : Election ,Nagercoil ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...