தர்மபுரி, மார்ச். 10: தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. தர்மபுரி குமாரசாமிபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா நேற்று காலை 10.45 மணிக்கு துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி, சுப்ரமணியர், அம்பாள் சிறப்பு ஹோமம் நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு சக்தி கரகம் அழைத்தலும், இரவு 7 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. காலை முதல் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இன்று (10ம் தேதி) காலை பூமிதி திருவிழா, நாளை 11ம் தேதி பொங்கல் வைத்தல், 12ம் தேதி காலை பால்குடம் எடுத்தல், இரவு திருக்கல்யாணம், இரவு 1 மணிக்கு முகவெட்டு ஊர்வலம் நடக்கிறது. பின்னர் முக்கிய விழாவான 13ம் தேதி பகல் 11.30 மணிக்கு மயான கொள்ளை விழா நடக்கிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை கடித்தப்படி ஊர்வலமாக வருவார்கள். பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி ரத்த சோறு பெறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி பல்லக்கு உற்சவம், 15ம் தேதி பிள்ளைபாவு மற்றும் கும்பபூஜை, கொடி இறக்கம் நடக்கிறது.மயான கொள்ளை நிகழச்சியின் போது திரளாக பக்தர்கள் கலந்து ெகாள்ள உள்ளதால், டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.