×

பாடாலூர் அருகே வாகன சோதனையில் பைக் திருடன் கைது

பாடாலூர், மார்ச் 9: பாடாலூர் அருகே பைக்கை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு செருப்புக் கடையில் செருப்பு வாங்குவதுபோல் சென்ற ஒரு வாலிபர், அந்த கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த முகம்மதுநபி ஸ்கான் என்பவரது பைக்கை திருடிச் சென்றார். இதுகுறித்து அவர் பாடாலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அனைத்து பகுதிகளிலும் உஷார் படுத்தப்பட்டனர். அதனடிப்படையில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் எடுத்து வந்த பைக் திருட்டு பைக் என தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கள்ளக்குறிச்சி ஏம்பேர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா என்கின்ற ராக்கெட் ராஜா என்பதும், இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் செட்டிகுளத்தில் திருடிச் சென்ற பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Badalur ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...