சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனையிட்டனர். சென்னை, திருச்சி, வேலூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 40 அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றது. லஞ்சப் புகார்கள் குவிந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் சிக்கிய ரொக்கம் செய்யப்பட்டுள்ளது.
