டெல்லி: டெல்லி துக்ளகாபாத் 5 மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தாகக் கருதப்பட்ட இச்சம்பவம், சிசிடிவி ஆதாரங்கள் மூலம் திட்டமிட்ட சதி என டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பணத் தகராறு காரணமாக சரிதா என்ற பெண் தூண்டியதால், 17 வயது சிறுமி நள்ளிரவில் ஸ்கூட்டருக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். அதுவே பெரும் விபத்தாக மாறியுள்ளது.
