அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரானில் 1,937 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24,800 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேரும் அமெரிக்க வீரர்கள் 13 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் போரால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் 6,239 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 1,268 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,750 பேர் காயமடைந்துள்ளனர்.
