×

அரூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரூர், பிப்.18: அரூர் அருகே, மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரூரை அடுத்த லிங்காபுரத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி குமரவேல் தலைமை வகித்தார். சென்னை முதல் சேலம் வரை 8வழிச்சாலை அமைத்தே தீருவோம் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும். சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை அமைக்க ஒருபோதும் நிலத்தை தரமாட்டோம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags : Arur ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி