டெல்லி: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது வதந்தி, ஊரடங்கு குறித்த தகவல்கள் தவறானவை என ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஊரடங்கு குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம், ஒன்றிய அரசின் பரிசீலனையில் ஊரடங்கு குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று கூறினார்.
