திருவண்ணாமலை: கூலித் தொழிலாளி கொலை வழக்கில் வேட்டவலம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ஜான் விக்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூலித் தொகை கொடுக்கல் வாங்கலில் 2013ம் ஆண்டு பால்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த ஜான் விக்டரின் தாயார் மேரி ஸ்டெல்லாவுக்கு ரூ.500 அபராதம், சகோதரி விமலாவுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
