×

உதவித்தொகை கேட்டு தாலுகா அலுவலகத்தில் தொழிலாளி தர்ணா

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் எல்லப்பன்(50). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் தர்மபுரி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். திடீரென துணை தாசில்தார் அமரும் இருக்கையின் அருகே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அங்கிருந்த அதிகாரிகள் சமரசப்படுத்தினர். அப்போது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், திடுக்கிட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

இதுகுறித்த தகவலின்பேரில், டவுன் போலீசார் விரைந்து சென்று எல்லப்பனிடம் விசாரித்தனர். அப்போது, தனது தந்தை முனுசாமி கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி இறந்துவிட்டார். இறப்பிற்கான நலிவடைந்தோர் உதவித்தொகை கேட்டு, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து ஒரு மாதமாகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, எல்லப்பன் மகனை போலீசார் வரவழைத்தனர். பின்னர், அவரிடம் எல்லப்பனை ஒப்படைத்து எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாலுகா அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tarna ,taluka office ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...