×

2 குழந்தைகளுக்கு டெங்கு

காங்கயம், பிப். 17: காங்கயத்தில் இரு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாத்தத்தில் பெய்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில்  கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்படுகிறது. காங்கயம், ஜனனி நகரில் ஒரு  வயது ஆண் குழந்தைக்கும், கணபதியாளையத்தில் இரண்டு வயது பெண்குழந்தைக்கும்  டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியிருப்பு பகுதியில்  சுகாதாரத்துறையால் மருத்துப முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...