×

மாவட்டத்தில் 3 டி.எஸ்.பி.,கள் பணியிட மாற்றம்

ஈரோடு, பிப். 17: சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 3 டி.எஸ்.பி.,க்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, போலீஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராதா கிருஷ்ணன், திருப்பூர் மாநகர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஆல்பர்ட், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவுக்கும், சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ராஜேஷ், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.,திரிபாதி பிறப்பித்துள்ளார்.

Tags : district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...