×

வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறிப்பு

கீழ்வேளூர், பிப்.16: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுமதி(45). நேற்றுமுன்தினம் நேற்றுமுன்தினம் இரவு குமார், சுமதி ஒரு அறையிலும், மாமனார், மாதியார் மற்றொரு அறையிலும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து சுமதியின் அறைக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலிசெயினை பறித்துக்கொண்டதுடன், அவர் காதிலிருந்த நகைகளையும் பறிக்க போர்வையால் சுமதியின் தலையை சுற்றி தரதரவென வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தார். அப்போது கிரைண்டரில் சுமதியின் கால் இடித்து எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். இந்த சத்தம் கேட்டு குமார் எழுந்து வந்தார். அதற்குள் மர்ம நபர் தப்பிஓடிவிட்டார். மனைவி படுகாயமடைந்து கிடந்ததை பார்த்த குமார் உடனடியாக அவரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். இதுபற்றி அவர் அளித்த புகாரின்பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையனை தேடிவருகின்றனர்.

Tags : assault ,house ,
× RELATED கடலூரில் நடத்துநர் தாக்கப்பட்டத்தை...