டெல்லி: ரூபாய் மதிப்பு கடும் சரிவு, தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு ஆகியவை பணவீக்கத்தின் அறிகுறிகள் என ராகுல் காந்தி தெரிவித்தார். ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின் சேமிப்பு, செலவினங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை; வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன என ராகுல் காந்தி விமர்சித்தார். 5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.யின் விலை மேலும் உயர்த்தப்படும் என கூறினார்.
