- பிரேமலதா
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- திருமலா
- தேமுதிக
- பிரேமலதா விஜயகாந்த்
- விஜய பிரபாகரன்
- சண்முகப் பாண்டியன்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த பிரேமலதாவிஜயகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், ‘நேற்று எனது பிறந்தநாள் என்பதால் திருமலைக்கு வந்தோம். இன்று தெலுங்கு வருட பிறப்பு யுகாதி பண்டிகையொட்டி ஏழுமலையானை தரிசனம் செய்தோம். இந்த ஆண்டு அனைவருக்கும் நல்லதை சேர்த்து மகிழ்ச்சியுடன் வாழும்பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொண்டேன்.
வழக்கமாக விஜயகாந்த் எந்த செயலை தொடங்கினாலும் ஏழுமலையானை வேண்டி செயல்படுவது வழக்கம். அவர் நம்மை விட்டு பிரியவில்லை. எங்களுடனே இருக்கிறார். எனவே தேர்தலுக்கு முன்பு ஏழுமலையானை வேண்டிக்கொள்வதற்காக வந்து வேண்டிகொண்டேன். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் வந்து சுவாமிக்கு நன்றி செலுத்துவோம் என்றார்.
