×

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கருப்பம்புலம் பி.வி தேவர் அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம்

வேதாரண்யம், பிப். 12: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கருப்பம்புலம் பி.வி தேவர் அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான துவக்க விழா நடந்தது. கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை வழங்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: விடாமுயற்சியுடன் போராடினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

காரைக்கால், பிப். 12: காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. ஐடி துறை தலைவர் ஆராமுதன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்டம், தேனூர் அரசு மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 105 பேருக்கு நடத்திய சோதனையில் எவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும். முககவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Tags : Vedaranyam Panchayat Union Karuppambulam PV Thevar Government High School ,Government High School ,
× RELATED எனது ‘பலாப்பழம்’ சின்னம் சரியா தெரியலயே ஏன்? மன்சூர்அலிகான் வாக்குவாதம்