டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா விளக்கம் அளித்துள்ளார். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட மாட்டாது. அமெரிக்காவிடம் இருந்து எரிவாயு வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுஜாதா சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
