×

1700 கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அகழி ரேஞ்சு கலால்த்துறைக்கு அட்டப்பாடி காட்டு பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா பயிரிட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கலால்த்துறை இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் படவயல் ஊராட்சியில் பழயூர் பகுதியில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் நேற்று கஞ்சா வேட்டை நடத்தினர்.

அப்போது அங்குள்ள பிள்ளமலை வனத்தின் உட்பகுதியிகளிலும், மலைஉச்சிப்பகுதியில் அதன் சுற்றுவட்டார மலையடிவாரங்களிலும் சில சமூகவிரோதிகள் கஞ்சா பயிரிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6 மாதம் வளர்ந்த நிலையில் காணப்பட்ட 1700க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை தீயிட்டு அழித்தனர். முன்னதாக கலால்த்துறை போலீசார் வருவதை தெரிந்துகொண்ட சமூகவிரோதிகள் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகி தப்பிவிட்டனர்.

Tags : Palakkad ,Excise Department of ,Akazi Range ,Kerala ,Attappadi forest ,Excise Department ,Palayur ,Badavayal panchayat… ,
× RELATED சார் தாம் யாத்திரை 2026: 10 நாட்களில் 6...