×

முன்விரோதம் காரணமாக அடிதடி 11 பேர் மீது வழக்கு

 

தேவதானப்பட்டி, மார்ச் 17: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த மணி(60) என்பவர் தரப்பினருக்கும், சக்திராஜா(40) என்பவர் தரப்பினருக்கும் வீட்டின் அருகே டூவீலர் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி இது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியதாக மாறியது. இதில் மணி மனைவி முத்தாயி(50) புகாரில் சக்திராஜா, கார்த்தி, சிட்டையா, மணி, தனம், சந்தனம், தேவி ஆகியோர் மீதும், சக்திராஜா மனைவி தேவி புகாரில் பாண்டி, காசி, மணி, முத்தாயி, ஆகியோர் மீதும் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Devadhanapatti ,Mani ,Shakthiraja ,Devadhanapatti South Street ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...