கோபி அருகே உள்ள சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மகாதேவன் என்பவரிடம் இருந்த ரூ.53,200-ஐ பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவியரசுவிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறைக்கு வேனில் தக்காளி பாரம் ஏற்றிச்சென்று கொண்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
