சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பு வரும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
