×

சாத்தான்குளத்தில் சாலையில் கிடந்த 1.5 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த எல்ஐசி முகவர் சாத்தான்

குளம், மார்ச் 14: சாத்தான்குளத்தில் சாலையில் கிடந்த 1.5 பவுன் நகையை மீட்டு போலீசில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி ஆவுடையப்பன் பாராட்டினார். சாத்தான்குளத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவர், நேற்று முன்தினம் சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் வாரச்சந்தை அருகில் வந்தபோது 1.5 பவுன் செயின் கீழே கிடந்துள்ளது. அதனை கண்டெடுத்த அவர், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பனிடம், விவரத்தை கூறி நகையை ஒப்படைத்தார். இந்த நகை குறித்த தகவல், சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நகையை தவறவிட்டது, வடக்கு அமுதுண்ணாகுடியை சேர்ந்த செல்லையா மகன் பொறியாளர் அகஸ்டின் ராஜ் (31) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் வரவழைத்து நகையை ஒப்படைத்தனர். மேலும் சாலையில் கிடந்த நகையை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த எல்ஐசி முகவர் அண்ணாமலையை, டிஎஸ்பி ஆவுடையப்பன் பாராட்டி கவுரவித்தார்.

Tags : LIC ,Satan ,Satankulam ,Kulam ,DSP ,Avudaiyappan ,Annamalai ,Satankulam-Nazareth road ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...