×

சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘பள்ளிகள் மேம்பாடு – ரூ.533 கோடி, வட சென்னை வளர்ச்சித் திட்டம் சுமார் ரூ.7,000 கோடி. இன்னும் செய்வோம், உலகத்தர உள்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030ல் வளர்த்தெடுப்போம் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள திராவிட மாடல்

* பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17)

* பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள்

* மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர்

* பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி

* குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி

* சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர்

* வடசென்னை வளர்ச்சித் திட்டம் – சுமார் 7,000 கோடி ரூபாய்

இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப்பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது!

இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Chief Minister ,MLA K. Stalin ,MLA. ,K. Stalin ,NORTH CHENNAI ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...