கோவை, மார்ச் 13: அதிவேகம் காரணமாக கடந்த மாதம் 28 நாட்களில் 28 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். இதையடுத்து இரவு நேரங்களில் கண்காணிக்க 8 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், அதிவேகம், மதுபோதையில் வாகனங்களை இயக்குவது, சிறுவர்களை வாகனங்களை இயக்க அனுமதிப்பது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவது, குண்டும் குழியுமான சாலை ஆகிவற்றால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
