தேவதானப்பட்டி, பிப். 11: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுதாகர்(40). இவர் ஆட்டோவில் சவாரி ஏற்றி, மேல்மங்கலத்தில் இறக்கி விட்டு ஜெயமங்கலம் நோக்கி வந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந்து ஜெயமங்கலம் நோக்கி வந்த தனியார் பஸ் டிரைவருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தனியார் பஸ் டிரைவர் சிந்துவம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜா(29) ஆகியோர் ஆட்டோ டிரைவர் சுதாகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சுதாகர் புகாரின் பேரில், ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம், அருள்ராஜா ஆகியோரை கைது செய்தனர்.