×

போலி நெல் விதைகள் விற்பனை நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

தேனி, மார்ச் 10: தேனி அருகே விவசாயிகளுக்கு போலி நெல் விதைகளை வழங்கிய விற்பனை மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், தேனியில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கூறும்போது, ‘தேனி அருகே உள்ள அமைச்சியாபுரத்தைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, தேனி முத்துபிரித்தவன்பட்டி பகுதியைச் சேர்ந்த விதை நெல் விற்பனை மையம் தரப்பில் நெல் விதைகள் வழங்கப்பட்டன.

Tags : Theni ,Tamil Nadu Farmers' Association ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...