நத்தம், மார்ச் 9: நத்தம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் நத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் அண்ணா நகர், கோவில்பட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட போது, முகமது இஷாக், நவக்குமார் ஆகியோரது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 700 கிராம் புகையிலைப் பொருட்களை கைப்பற்றி இரு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
